×

திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக 6.47 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக 6.47 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த பத்து நாட்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.40.20 கோடி காணிக்கைகள் செலுத்தினர். 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் லட்டு பிரசாதங்களை பக்தர்கள் பெற்று சென்றனர். 2.14 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

The post திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக 6.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Vaikunda Ekadasi ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்